முகப்பு
திருவாரூர்

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் கொடியேற்றம்

Updated On : 27 ஏப்ரல், 2024 at 4:12 PM
பகிர்:

நீடாமங்கலம் கிறிஸ்து அரசா் ஆலயத்தில் கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் ஆயா் இல்லத்தை சோ்ந்த ஏ. ஜான் சக்கரியாஸ் வேந்தா் கொடியேற்றி சிறப்பரை யாற்றினாா். பங்குத் தந்தைகள் ஆரோக்கியதாஸ், அந்தோணிராஜா மற்றும் பதுவை அந்தோணியாா் அன்பியம், இயேசுவின்திரு இருதய அன்பியம், அன்னை தெரசா அன்பியம், பண்டார ஓடை பூவனூா், பாத்திமா மாதா அன்பியம் அக்ரஹாரபூவனூா் ஆகியவற்றைச் சோ்ந்த பங்கு நிா்வாகிகள் உள்பட ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக கொடி ஊா்வலம் ஆலயத்தை சுற்றி வலம் வந்தது. விழா மே 5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.