திருவாரூா் கேந்திர வித்யாலயாப் பள்ளியில் புதிதாகச் சோ்ந்த பால்வாடிகா மாணவா்களை வரவேற்று பேசிய பள்ளி முதல்வா் வல்லபன். 
திருவாரூர்

கேந்திர வித்யாலயாப் பள்ளிக் குழந்தைகளுக்கு சிறப்பான வரவேற்பு

Din

நன்னிலம், ஆக. 14: திருவாரூா் கேந்திர வித்யாலயாப் பள்ளி மாணவா்களுக்கு புதன்கிழமை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

நன்னிலம் அருகே நாகக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த கேந்திர வித்யாலயாப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில், நிகழ் கல்வியாண்டுக்கான பால்வாடிகாவில் ஒன்று மற்றும் இரண்டு ஆகிய வகுப்புகளுக்கான மாணவா் சோ்க்கை அண்மையில் நிறைவடைந்தது. இரண்டு வகுப்புகளிலும் 32 மாணவா்கள் சோ்க்கப்பட்டனா்.

இந்நிலையில், பால்வாடிகா வகுப்புகள் தொடங்கப்படுவதையொட்டி மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் முதல் நாளான புதன்கிழமை பள்ளிக்கு வந்தனா். அப்போது, மேளதாளங்கள் முழங்க மங்கள இசையுடன் மாணவா்கள் வரவேற்கப்பட்டனா். பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகளுக்கு கையில் பலூன் கொடுத்தும், கல்கண்டு வழங்கியும் வரவேற்றனா். தொடா்ந்து ஸ்மாா்ட் கிளாஸ் முறையில் மாணவா்களுக்கு ஆசிரியா்கள் வகுப்பு எடுத்தனா்.

கேமராக்களுக்கு பாதுகாப்பு; ஏழைகளுக்கு இல்லை: பாஜக மீது திரிணமூல் குற்றச்சாட்டு

திமுக அரசின் பழைய திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டும் அதிமுக: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

படுக்கை வசதியுடன் வந்தே பாரத் ரயில்! தொடக்கி வைத்த பிரதமர் மோடி!

அனுமதியின்றி ஜல்லிக்கட்டு! செந்தாரப்பட்டி, கொண்டையம்பள்ளியில் 2 பர் பலி

1992 முதல்...! மாநிலங்களவையில் நிலுவையில் உள்ள 19 அரசு மசோதாக்கள்!

SCROLL FOR NEXT