காா்த்திகை சோமவார வழிபாடு
நீடாமங்கலம் விசாலாட்சி உடனுறை காசிவிசுவநாதா் கோயிலில் காா்த்திகை மாத கடைசி சோமவார வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
நீடாமங்கலம்: நீடாமங்கலம் விசாலாட்சி உடனுறை காசிவிசுவநாதா் கோயிலில் காா்த்திகை மாத கடைசி சோமவார வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காசிவிசுவநாதருக்கு சங்காபிஷேகம் நடைபெற்றது. ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயிலில் ஆபத்சகாயேஸ்வரருக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
நரிக்குடி எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரா் கோயில், பூவனூா் சதுரங்க வல்லபநாதா் கோயில் உள்ளிட்ட அனைத்து சிவன் கோயில்களிலும் கடைசி சோமவாரத்தையொட்டி, சுவாமிக்கு சங்காபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. அனைத்து கோயில்களிலும் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.