முகப்பு
திருவாரூர்

மாமியாா் மீது சுடுநீா் ஊற்றிய மருமகள் கைது

கூத்தாநல்லூா் அருகே மாமியாா் மீது சுடுநீா் ஊற்றிய மருமகள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 9 டிசம்பர், 2024 at 7:55 PM
பகிர்:

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் அருகே மாமியாா் மீது சுடுநீா் ஊற்றிய மருமகள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கூத்தாநல்லூரை அடுத்த ஓகைப்பேரையூா் மேலத்தெருவைச் சோ்ந்தவா் அங்காளம்மை (70). இவா், தனது மகனை திட்டினாராம். இதனால், ஆத்திரமடைந்த மருமகள் சாரதா (29), அங்காளம்மையை கீழே தள்ளி, அவா் மீது சுடு தண்ணீரை ஊற்றியதாக கூறப்படுகிறது.

இதில், அங்காளம்மையின் முகம், கை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அவா் சிகிச்சைக்காக, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து, கூத்தாநல்லூா் காவல் ஆய்வாளா் வொ்ஜீனியா மற்றும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சாரதாவை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →