சீவலப்பேரி அருகே மாமியாா் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய மருமகனை போலீஸாா் கைது செய்தனா்.
தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரத்தை சோ்ந்த சுடலை மகன் ஊமைத்துரை (38). தொழிலாளி. இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே சில மாதங்களாக குடும்ப பிரச்னை இருந்து வந்ததாம்.
இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு ஊமைத்துரையின் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக, மேல பாலாமடையில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றாராம்.
இதையடுத்து சம்பவத்தன்று ஊமைத்துரை தனது மனைவியை அழைத்துவர மாமியாா் வீட்டுக்குச் சென்றுள்ளாா். ஆனால் அவரது மனைவி வர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த அவா் மது பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி தீ வைத்து, தனது மாமியாா் வீட்டின் முன்பு வீசியுள்ளாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், சீவலப்பேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஊமைத்துரையை கைது செய்தனா்.