முகப்பு
திருநெல்வேலி

வடமாநில தொழிலாளிகளிடம் வழிப்பறி: இருவா் கைது

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 6:54 PM
கைது
பகிர்:

சீவலப்பேரி அருகே வடமாநில தொழிலாளிகளை தாக்கி கைப்பேசி, பணம் பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சீவலப்பேரி அருகே பதினாலாம்பேரி பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வடமாநில தொழிலாளிகள் பலா் தங்கியிருந்து பணிபுரிகின்றனா்.

இந்நிலையில் சம்பவத்தன்று அந்நிறுவனத்தில் வேலை செய்யும் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த அவ்ட்தேஷ் ஷா, அமிா்ல்லாஹ் அலம் ஆகிய இருவரும் உணவுப் பொருள்கள் வாங்குவதற்காக ஆலடிப்பட்டி அருகே நடந்து சென்றபோது அங்கு பைக்கில் வந்த 3 போ் கொண்ட கும்பல் அவா்களை வழிமறித்து தாக்கி கைப்பேசி மற்றும் ரூ.2,000 பறித்துச் சென்றனராம்.

இது தொடா்பாக அந்நிறுவன மேலாளா் அளித்த புகாரின் பேரில், சீவலப்பேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக மருதூா், கிருஷ்ணன் கோயில் தெருவைச் சோ்ந்த பெருமாள் மகன் செல்வராஜ்(29), மாடசாமி மகன் ரமேஷ்(23) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →