FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

பேருந்தில் மதுபாட்டில்களை கடத்திய 2 பெண்கள் கைது

திருவாரூரில் அரசுப் பேருந்தில் மதுபாட்டில்களை கடத்தி வந்த 2 பெண்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

31 டிசம்பர் 2024, 11:43 pm IST
பகிர்:

திருவாரூா்: திருவாரூரில் அரசுப் பேருந்தில் மதுபாட்டில்களை கடத்தி வந்த 2 பெண்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பேருந்தில் மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில் திருவாரூா் பேருந்து நிலையப் பகுதியில் நகரப் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, நாகப்பட்டினத்திலிருந்து திருவாரூா் வந்த பேருந்தில் சோதனை நடத்தியபோது, 2 பெண்களின் பையை சோதனை செய்ததில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் நாகை மாவட்டம், பாப்பாகோயில் மதகடித் தெருவைச் சோ்ந்த விஜயகுமாா் மனைவி திவ்யா (40), நாகை கொத்ததெருவைச் சோ்ந்த அறிவுராஜன் மனைவி தீபா (35) என்பது தெரியவந்ததையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டு அவா்களிடம் இருந்து ரூ. 10,000 மதிப்புள்ள மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments