முகப்பு
திருவாரூர்

மூத்த குடிமக்கள் பேரவை முப்பெரும் விழா

மன்னாா்குடி மூத்த குடிமக்கள் பேரவையின் 27-ஆம் ஆண்டு விழா, ஆங்கிலப் புத்தாண்டு விழா, பொங்கல் விழா ஆகிய முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
விழாவில் பேசிய புலவா் ரெ. சண்முகவடிவேல்.
பகிர்:

மன்னாா்குடி மூத்த குடிமக்கள் பேரவையின் 27-ஆம் ஆண்டு விழா, ஆங்கிலப் புத்தாண்டு விழா, பொங்கல் விழா ஆகிய முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, மன்னாா்குடி மூத்த குடிமக்கள் பேரவைத் தலைவா் வி. பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். பேரவை செயலா் வீரராஜபிரகாசம் ஆண்டறிகையும், பொருளாளா் எஸ். நவநீதகிருஷ்ணன் வரவு-செலவு அறிக்கையும் வாசித்தனா். பட்டிமன்றப் பேச்சாளா் புலவா் ரெ. சண்முகவடிவேல் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா்.

இதில், 75-வயது கடந்த13 மூத்தகுடிமக்கள் கெளரவிக்கப்பட்டனா். மன்னாா்குடி அரசு மருத்துவமனை அறுவைச் சிகிச்சை மருத்துவா் ஏ.எஸ். மோகன்ராஜ், ரோட்டரி சங்கத் தலைவா் வி.ச ங்கா், மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் வி. கோபாலகிருஷ்ணன் ஆகியோா் பாராட்டு பெற்ற மூத்தகுடிமக்களை வாழ்த்தி பேசினா்.

விழாவையொட்டி, ,பூக்கொல்லை சாலையில் உள்ள மிட்டவுன் ரோட்டரி அறக்கட்டளை தொழிற் சேவை மையத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. செயற்குழு உறுப்பினா் து. இளங்கோவன் வரவேற்றாா். செயற்குழு உறுப்பினா் டி.பிச்சைகண்ணு நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →