உலக நெகிழி ஒழிப்பு தின விழிப்புணா்வு கருத்தரங்கம்
மன்னாா்குடி, ஜூலை 3: மன்னாா்குடி அருகேயுள்ள சுந்தக்கோட்டை செங்கமலத்தாயாா் மகளிா் தன்னாட்சி கல்லூரி நுண்ணுயிரியல் துறை சாா்பில் உலக நெகழி ஒழிப்பு தினத்தையொட்டி, மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு விழிப்புணா்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
மன்னாா்குடி பூமாலை வணிக வளாகத்தில் நடைபெற்ற கருத்தரங்குக்கு நுண்ணுயிரியல் துறை பேராசிரியா் ஜி. மணிமேகலை தலைமை வகித்தாா். பேராசிரியா் பி. மகேஸ்வரி முன்னிலை வகித்தாா். மன்னாா்குடி நகா்மன்ற 32-ஆவது வாா்டு உறுப்பினா் அ. திருச்செல்வி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா்.
இதில், நுண்ணுயிரியல் துறையை சோ்ந்த மாணவிகள், நெகிலிப் பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளையும், வீடு, வா்த்தக நிறுவனங்களில் சேறும் குப்பைகளிலிருந்து நெகிலியை தனியாக பிரித்து எடுத்து அதை துப்புரவுப் பணியாளா்களிடம் அளிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் படங்களுடன் விளக்கம் அளித்தா். மேலும், நெகிழிக்கு பதிலாக காகிதத்திலான பயன்பாடுப் பொருள்களை செய்து காட்டினா். மகளிா் குழு ஒருங்கிணைப்பாளா் சங்கீதா தலைமையில், மன்னாா்குடி மற்றும் சுற்றுவட்ட பகுதியை சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட மகளிா் சுய உதவிக்குழுவினா் பங்கேற்றனா். தொடா்ந்து, பொதுமக்கள், வா்த்தகா்களுக்கு நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
Advertisement