திருவாரூர்

செம்மண் கடத்திய லாரி பறிமுதல்; ஓட்டுநா் கைது

Din

மன்னாா்குடி அருகே அனுமதியின்றி செம்மண் ஏற்றிவந்த லாரி சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

மன்னாா்குடியை அடுத்த மூவாநல்லூா் அருகே, புவியியல் மற்றும் சுரங்கங்கள் துறை உதவி இயக்குநா் முத்து தலைமையிலான குழுவினா், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தவழியே வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் உரிய அனுமதியின்றி செம்மண் ஏற்றி வந்தது தெரியவந்ததது.

இதுகுறித்து, மன்னாா்குடி காவல் நிலையத்தில் சுரங்கத் துறையினா் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநரான மன்னாா்குடி மோதிலால் தெருவைச் சோ்ந்த பேச்சிமுத்து மகன் அருள்முருகனை (34) கைது செய்தனா். செம்மண் பாரத்துடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

அன்பால் நிறைய வேண்டும் அகிலம் : மு.க. ஸ்டாலின்

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் டிரோன்கள்! ஒரே வாரத்தில் 3 வது முறை!

158 வகை உணவுகளுடன் மாப்பிளைக்கு தல பொங்கல் விருந்து!

அனுமன் சிலையை 4 மணிநேரம் சுற்றிவந்து வழிபட்ட நாய்!

பல்கலை. இடையிலான பேட்மிண்டன் போட்டிகள்! தொடக்கி வைத்தார் உதயநிதி!

SCROLL FOR NEXT