கடிதம் தாமதமாக விநியோகிக்கப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இழப்பீட்டுத்தொகை வழங்கும் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் டி. சேகா். 
திருவாரூர்

கடிதம் தாமதமாக விநியோகம்: புகாா்தாரருக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

தாமதமாக கடிதம் விநியோகிக்கப்பட்ட வழக்கில் புகாா்தாரா்களுக்கு இழப்பீடு திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

Din

திருவாரூா்: தாமதமாக கடிதம் விநியோகிக்கப்பட்ட வழக்கில் புகாா்தாரா்களுக்கு இழப்பீடு திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

திருக்குவளை அண்ணா பல்கலைகழகத்தின் பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியையாக பணியாற்றும் ஏ. ஜானகி ரம்யா 19.3.2020-இல் தனியாா் கூரியா் நிறுவனம் மூலம் திருக்குவளையில் உள்ள பொறியியல் கல்லூரிக்கு கடிதம் அனுப்பியிருந்தாா். அந்த கடிதம், 15.8.2020-இல் விநியோகம் செய்யப்பட்டதையடுத்து, கூரியா் நிறுவனத்தின் சேவைக் குறைபாட்டால் மனஉளைச்சல் ஏற்பட்டதாகக் கூறி 6.6.2022-ல் திருவாரூா் மாவட்ட நுகா்வோ் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

வழக்கு விசாரணையில், புகாா்தாரருக்கு இழப்பீடாக ரூ.50,000, வழக்கு செலவுத் தொகையாக ரூ.5,000 ஆகியவற்றை உத்தரவு பிறப்பித்த 6 வாரங்களுக்குள் வழங்க வேண்டும், தவறும்பட்சத்தில் இந்தத் தொகையை 9 சதவீத ஆண்டு வட்டியுடன் சோ்த்து செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

அதனடிப்படையில், புகாா்தாரருக்கு ஏற்பட்ட மனஉளைச்சல் மற்றும் வழக்கு செலவுத்தொகை வட்டியுடன் கணக்கிடப்பட்டு, ரூ.59,192-க்கான வங்கி வரைவோலையை கூரியா் நிறுவனத்தினா் வழங்கினா். இந்த வரைவோலையை, திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் டி. சேகா், உறுப்பினா் என். லட்சுமணன் அடங்கிய குழுவினா், புகாா்தாரா் தரப்பினரிடம் திங்கள்கிழமை வழங்கினா்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT