திருவாரூர் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பில் 92.49% தேர்ச்சி
திருவாரூர் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பில் 92.49% தேர்ச்சி
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 92.49 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெற்றன. இதற்கான தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.
திருவாரூர் மாவட்டத்தில் 7208 மாணவர்கள், 7698 மாணவிகள் என மொத்தம் 14906 பேர் தேர்வு எழுதியிருந்தனர். இதில், 6448 மாணவர்கள், 7338 மாணவிகள் என மொத்தம் 13786 பேர் தேர்ச்சி பெற்றனர்.
அந்த வகையில், 89.46 சதவீத மாணவர்களும், 95.32 சதவீத மாணவிகளும் என மொத்தம் 92.49 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 4,105 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. அதில் அரசு பள்ளியில் எண்ணிக்கை 1364.