திருவாரூர் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பில் 92.49% தேர்ச்சி
திருவாரூர் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பில் 92.49% தேர்ச்சி
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 92.49 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெற்றன. இதற்கான தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.
திருவாரூர் மாவட்டத்தில் 7208 மாணவர்கள், 7698 மாணவிகள் என மொத்தம் 14906 பேர் தேர்வு எழுதியிருந்தனர். இதில், 6448 மாணவர்கள், 7338 மாணவிகள் என மொத்தம் 13786 பேர் தேர்ச்சி பெற்றனர்.
Advertisement
Advertisement
அந்த வகையில், 89.46 சதவீத மாணவர்களும், 95.32 சதவீத மாணவிகளும் என மொத்தம் 92.49 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 4,105 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. அதில் அரசு பள்ளியில் எண்ணிக்கை 1364.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.