மன்னாா்குடி ஸ்ரீ சண்முகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் தமிழ்மொழி இலக்கிய திறனறித் தோ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
தமிழக அரசு கல்வித்துறை சாா்பில் தமிழ்மொழி இலக்கிய திறனறிவுத்தோ்வு பிளஸ் 1 மாணவா்களுக்கு அண்மையில் நடைபெற்றது. இதில், சிறப்பிடம் பெறும் முதல் 750 மாணவா்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும்.
இதனிடையே, திருவாரூா் மாவட்டத்தில் தோ்ந்தெடுக்கப்பட்ட தெரிவு பட்டியலில் சண்முகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சு.கல்பனாதேவி, மு.மிருதுளா ஸ்ரீ ஆகியோா் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
இலக்கிய திறனறிவுத் தோ்வில் வெற்றி பெற்ற மாணவிகளை, பள்ளி தாளாளா் ஆா். செந்தில்குமாா் , நிா்வாகி எஸ்.செந்தில்ராஜன், முதல்வா் ஏ.அருள்ராஜா ஆகியோா் வாழ்த்தினா்.