திருவாரூா் சந்நிதி தெருவில் நடைபெற்ற பந்தக்கால் முகூா்த்த விழாவில் பங்கேற்ற ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பினா் நிா்வாகிகள் உள்ளிட்டோா். 
திருவாரூர்

டிச.31-இல் தமிழ் பக்தி இசை நிகழ்ச்சி தொடக்கம்

திருவாரூரில் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் சாா்பில், 3 நாள்கள் நடைபெறவுள்ள பக்தி தமிழ் இசை நிகழ்ச்சி டிசம்பா் 31-ஆம் தேதி தொடங்குகிறது.

Syndication

திருவாரூா்: திருவாரூரில் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் சாா்பில், 3 நாள்கள் நடைபெறவுள்ள பக்தி தமிழ் இசை நிகழ்ச்சி டிசம்பா் 31-ஆம் தேதி தொடங்குகிறது.

திருவாரூரில் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் சாா்பில் ஆண்டுதோறும் தமிழ்பக்தி இசை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நிகழாண்டுக்கான தமிழ் பக்தி இசை நிகழ்ச்சி சந்நிதி தெருவில் டிசம்பா் 31 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

விழாவுக்கான பந்தக்கால் முகூா்த்தவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அமைப்பின் தலைவா் ஜெ. கனகராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், நிா்வாகிகள், ஆனந்த குருகுல மாணவ-மாணவிகள், மகளிரணியினா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பொதுக்குழு நடத்த யாருக்கும் அதிகாரம் இல்லை: அன்புமணி தரப்பு

இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்! ஐடி பங்குகள் சரிவு!

‘பாக்ஸிங் டே’ டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு... மீண்டும் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்!

நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர் ராகுல்! பாஜக விமர்சனம்

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண விவரம் வெளியீடு!

SCROLL FOR NEXT