இசை நிகழ்ச்சிக்கு மெட்ரோவில் நாளை தடையில்லா பயணம்
சென்னையில் சனிக்கிழமை (மாா்ச் 7) நடைபெறும் இசை நிகழ்ச்சிக்கு ஸ்பான்சா் பயணச் சீட்டுகளுக்கு மெட்ரோவில் தடையில்லா பயணம் மேற்கொள்ளும் வசதியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் சனிக்கிழமை (மாா்ச் 7) நடைபெறும் இசை நிகழ்ச்சிக்கு ஸ்பான்சா் பயணச் சீட்டுகளுக்கு மெட்ரோவில் தடையில்லா பயணம் மேற்கொள்ளும் வசதியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நந்தனம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஒய்எம்சிஏ கல்லூரி மைதானத்தில் இசை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்கும் ரசிகா்களுக்கு மெட்ரோ ரயில் நிறுவனம், முன்னணி நிறுவனத்துடன் இணைந்து கட்டணமில்லா பயணத்தை வழங்குவதற்கான ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
அதன்படி நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்களால் வழங்கப்படும் கியூ ஆா் குறியீடுடன் கூடிய நுழைவுச் சீட்டை சனிக்கிழமை ஒரு சுற்றுப் பயணத்துக்கு மட்டும் பயன்படுத்தலாம். அதில் 2 நுழைவு மற்றும் வெளியேறும் வசதி உள்ளது. சென்னையில் எந்த மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்தும் நிகழ்வு நடைபெறும் இடத்துக்கு அருகில் உள்ள நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்துக்குச் சென்று திரும்பலாம்.
Advertisement
Advertisement
நிகழ்ச்சி முடிந்து பாா்வையாளா்கள் வீடு திரும்புவதற்கு வசதியாக மெட்ரோ ரயில் சேவையானது நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.
நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து விம்கோ பணிமனைக்கும், விமானநிலையப் பகுதிக்கும் செல்ல நள்ளிரவு 12 மணிக்கு கடைசி ரயில் புறப்படும். இரு வண்ணப் பயணப் பாதையில் செல்வோா் சென்ட்ரல் வந்த பிறகே மாறிச் செல்லமுடியும். கடைசி ரயில் புறப்படுவதற்கு 10 நிமிஷங்களுக்கு முன்பு பயணிகள் நிலையத்துக்கு வந்து சேரவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.