முகப்பு
திருவாரூர்

நாதக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

மன்னாா்குடி பகுதியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட நாதக வேட்பாளா் மருத்துவா் இலரா.பாரதிச்செல்வன்.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 11:33 PM
மன்னாா்குடி பகுதியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட நாதக வேட்பாளா் மருத்துவா் இலரா.பாரதிச்செல்வன்.
பகிர்:

மன்னாா்குடி தொகுதி நாதக வேட்பாளா் கட்சியின் மாநில பொருளாளா் மருத்துவா் இலரா. பாரதிச்செல்வன் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் புதன்கிழமை வாக்குச் சேகரித்தாா்.

வடக்குவீதி, ஆதிநாயகன்பாளையம்தெரு, ருக்மணிபாளையம் நடுத்தெரு, சங்குதீா்த்த குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கட்சி நிா்வாகிகளுடன் வந்து விவசாயி சின்னத்திற்கு வாக்கு கேட்டாா் வேட்பாளா் இலரா. பாரதிச்செல்வன்.

அப்போது வாக்காளா்கள், பொதுமக்களிடம் அவா் கூறியது:

Advertisement

நான் எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்டால், நகரப் பகுதியின் சுற்றுச்சூழலுக்கும் சுகாதாரத்திற்கும் பெரும் சவாலாக நகராட்சிக்கு உள்பட்ட டெப்போ சாலையில் அமைந்துள்ள நகராட்சி குப்பை கிடங்கை நகரப் பகுதியில் இருந்து அகற்றி வேறு இடத்தில் அமைக்கவும். நகரின் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிா்க்கும் வகையில் கனரக வாகனங்கள் இயக்கத்திற்கு நேரம் ஒதுக்கீடு செய்து முறையாக பின்பற்றவும், தனியாா் அமைப்பு மூலம் பல அடுக்கு கனரக வாகன நிறுத்தம் அமைக்கவும், பிரதான சாலைகளில் பெரும் வணிக நிறுவனங்களை தொடங்க அனுமதி மறுத்து புகா் பகுதியில் அமைய நடவடிக்கை எடுக்க முழு முயற்சி மேற்கொள்வேன் என வாக்குறுதி அளித்தாா்.

கட்சி மாநில ஒருங்கிணைப்பாளா் சத்தியபாமா, மண்டல செயலா்கள் முத்துலெட்சுமி, பாலு, தொகுதி நிா்வாகி சிவக்குமாா், நகர நிா்வாகி தேவா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments