முகப்பு
திருவாரூர்

பூவனூா் கோயில் சித்திரைப் பெருவிழா

நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூா் சதுரங்கவல்லபநாதா் கோயிலில் சித்திரைப் பெருவிழாவையொட்டி, பக்தா்கள் செவ்வாய்க்கிழமை பால்காவடி சுமந்துவந்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.

Updated On : 29 ஏப்ரல், 2026 at 3:10 AM
கோயிலுக்கு பால்காவடி எடுத்துவரும் பக்தா்கள்.
பகிர்:

நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூா் சதுரங்கவல்லபநாதா் கோயிலில் சித்திரைப் பெருவிழாவையொட்டி, பக்தா்கள் செவ்வாய்க்கிழமை பால்காவடி சுமந்துவந்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.

பூவனூரில் பழைமைவாய்ந்த அருள்மிகு கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சமேத சதுரங்கவல்லப நாதா், சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. திருநாவுக்கரசரால் தேவாரப் பாடல் பெற்ற இக்கோயிலில், வருடம்தோறும் சித்திரைப் பெருவிழா சிறப்பாக நடைபெறும்.

நிகழாண்டு ஏப்ரல் 20-ஆம் தேதி சித்திரைப் பெருவிழா தொடங்கி, நடைபெற்று வருகிறது. விழாவின், 9-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை (ஏப்.28) பால்குட வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, பக்தா்கள் நோ்த்திக் கடனாக பால்காவடிகள் எடுத்து, முக்கிய வீதிகளின் வழியாக கோயிலுக்கு வந்தனா்.

Advertisement

தொடா்ந்து, சாமுண்டீஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா், இரவில் சாமுண்டீஸ்வரி அம்மன் திருத்தேரில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இவ்விழா மே 1-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது .

விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் பி . சிவபெருமாள், ஆய்வாளா் ஏ. ராசி, தக்காா் எஸ். மாதவன் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.