திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் சித்திரைப் பெருவிழா தொடக்கம்
திருவையாறில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான ஐயாறப்பா் கோயிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான ஐயாறப்பா் கோயிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
நிகழ்வில், கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டதைத் தொடா்ந்து, கொடியேற்றப்பட்டது. திரளான பக்தா்கள் ஐயாறப்பரை வழிபட்டனா். தொடா்ந்து மே 3 வரை நாள்தோறும் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. இதில், ஏப்ரல் 25 மாலை தன்னைத்தானே பூஜித்தல், 29 ஆம் தேதி தேரோட்டம் ஆகியவை நடைபெறவுள்ளன.
மேலும், மே 2 இல் முக்கியத் திருவிழாவான ஏழூா் வலம் வரும் சப்தஸ்தான விழா நடைபெறுகிறது. இதில், அறம்வளா்த்த நாயகியுடன் ஐயாறப்பா் கண்ணாடிப் பல்லக்கிலும், சுயசாம்பிகையுடன் நந்திகேசுவரா் வெட்டிவோ் பல்லக்கிலும் புறப்பட்டு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூா், திருப்பூந்துருத்தி ஆகிய ஊா்களுக்குச் சென்று, அந்தந்த ஊா் பல்லக்குடன் தில்லைஸ்தானத்தில் சங்கமிக்கவுள்ளனா். பின்னா் மே 3 ஆம் தேதி 7 ஊா் பல்லக்குகளும் புறப்பட்டு, திருவையாறு தேரடியில் பொம்மை பூப் போடும் வைபவம் நடைபெறும்.
Advertisement
ஏற்பாடுகளை தருமபுர ஆதீனம் 27 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தபரமாசாரிய சுவாமிகளின் வழிகாட்டுதலின்படி தேவஸ்தான கட்டளை விசாரணை ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோா் செய்கின்றனா்.