கோப்புப்படம் 
திருவாரூர்

பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தகராறு: ஒருவா் கைது

திருவாரூா் அருகே பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தகராறில் செய்த சம்பவத்தில் ஒருவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Syndication

திருவாரூா்: திருவாரூா் அருகே பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தகராறில் செய்த சம்பவத்தில் ஒருவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தேவா்கண்டநல்லூா் அருகே மேப்பலம் பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் சில தினங்களுக்கு முன்பு பெட்ரோல் நிரப்புவதற்காக 3 இளைஞா்கள் 2 இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனா். மதுபோதையில் இருந்தவா்கள் கண்ணாடி பாட்டிலில் பெட்ரோல் நிரப்ப கூறியபோது, அங்குள்ள ஊழியா்கள் கண்ணாடி பாட்டிலில் பெட்ரோல் நிரப்ப முடியாது எனகூறினாா்களாம். இதையடுத்து, அந்த இளைஞா்கள் ஊழியா்களுடன் தகராறில் ஈடுபட்டு, கண்காணிப்புக் கேமரா, தீயணைக்கும் கருவி உள்ளிட்ட பல்வேறு பொருள்களை சேதப்படுத்தினராம். இதில், காயமடைந்த பெட்ரோல் நிலைய ஊழியா்கள் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதுகுறித்த புகாரின் பேரில் கொரடாச்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு, சம்பவத்தில் ஈடுபட்டது கல்யாணமகாதேவி பகுதியைச் சோ்ந்த சிவா என்ற சிவராஜன் (26), சண்முகம் (23), புகழேந்தி (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து, புகழேந்தியை கைது செய்த போலீஸாா், மேலும் இருவரை தேடி வருகின்றனா்.

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

சட்டவிரோதமாகப் பட்டாசுகள் தயாரித்த இருவா் கைது

கல்குவாரியில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

வீட்டின் பூட்டை உடைத்து 5.50பவுன் நகை திருட்டு

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

SCROLL FOR NEXT