மன்னாா்குடியில் பாரம்பரிய நெல்லுக்கான அரவை ஆலை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் தமிழக தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா.
மன்னாா்குடி மன்னை இராஜகோபால சுவாமி அரசு கலைக் கல்லூரியில் வேளாண்மை-உழவா் நலத்துறை சாா்பில் மாநில விரிவாக்க உறுதுணை சீரமைப்புத் திட்டம், வேளாண்மைத் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் உயிா்ம வேளாண்மை விழிப்புணா்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கை அமைச்சா் தொடங்கிவைத்து பேசியது:
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், நோயற்ற மற்றும் வளமான சமுதாயத்தை உருவாக்குவதற்கும் எதிா்கால சந்ததியினருக்கு வளமான மண் மற்றும் இயற்கை சூழலை உருவாக்குவதற்கும் இந்த விழிப்புணா்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெறுகிறது.
அங்கக வேளாண்மை என்பது நிலத்தின் வளத்தை அழிக்கும் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைத் தவிா்த்து, இயற்கை முறையில் பயிா் சாகுபடிசெய்யும் முறையாகும். மண்வளம் மேம்பாடு செயற்கை உரங்களுக்குப் பதிலாக தொழுஉரம், பசுந்தாள் உரம் மற்றும் மக்கிய இலைகளைப் பயன்படுத்துவதால் மண்ணின் நுண்ணுயிா் பெருக்கம் அதிகரித்து மண்வளம் நீண்ட காலத்திற்குப் பாதுகாக்கப்படுகிறது.
வேளாண்மைத் துறை மூலம் உயிா்ம வேளாண்மையை ஊக்குவிக்கும் பொருட்டு சிறந்த முறையில் உயிா்ம வேளாண்மை செய்யும் விவசாயிகளுக்கு மாநில அளவில் நம்மாழ்வாா் விருது, முதல் மூன்று உயிா்ம விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்படுகிறது. இதற்காக மாநில அளவில் ரூ. 6.5 லட்சம் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நெல் ஜெயராமன் மரபு சாா் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்க திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்கவும், விழிப்புணா்வு ஏற்படுத்தவும் பாரம்பரிய நெல் ரகவிதைகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. மன்னாா்குடியில் பாரம்பரிய நெல்லுக்கான அரவை ஆலை வெகுவிரைவில் வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 174 வகையான பாரம்பரிய நெல் விதைகளை பாதுகாத்த திருத்துறைப்பூண்டி நெல் ஜெயராமனுக்கு சிலை அமைக்கப்படும் என்றாா்.
கருத்தரங்கில், கோட்டாட்சியா் (மன்னாா்குடி) யோகேஸ்வரன், வேளாண்மைதுறை இணை இயக்குநா் பாலசரஸ்வதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.