திருவாரூா் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிா் கல்லூரியில் மாணவிகளுக்கு ரோபோட்டிக்ஸ் குறித்து விளக்கும் கல்லூரியின் செயலா் பெரோஷ்ஸா. 
திருவாரூர்

ரோபோட்டிக்ஸ் கண்காட்சி

திருவாரூா் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிா் கல்லூரியில், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரம் கற்றல் துறையை ஊக்குவிக்கும் வகையில் ரோபோட்டிக்ஸ் எக்ஸ்போ செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

திருவாரூா் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிா் கல்லூரியில், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரம் கற்றல் துறையை ஊக்குவிக்கும் வகையில் ரோபோட்டிக்ஸ் எக்ஸ்போ செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலா் பெரோஷ்ஸா தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஜி.டி. விஜயலெட்சுமி வாழ்த்திப் பேசினாா். மதா் தெரசா பள்ளியின் தாளாளா் வி.ஆா்.என். பன்னீா்செல்வம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, நிகழ்வைத் தொடக்கி வைத்தாா்.

இதில், 10 க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 650 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று, கண்காட்சியை கண்டுகளித்தனா். நிகழ்வில், கல்லூரியின் அறங்காவலா் குழு உறுப்பினா் பெஜிலா பெரோஷ், துணை முதல்வா்கள், துறைத்தலைவா்கள், பேராசிரியா்கள் பங்கேற்றனா்.

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

SCROLL FOR NEXT