முகப்பு
திருவாரூர்

போக்ஸோவில் இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

நன்னிலம் பகுதியில் போக்ஸோ வழக்கில் கைதான இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.

Updated On : 26 மார்ச், 2026 at 12:37 AM
ராமதாஸ்
பகிர்:

நன்னிலம் பகுதியில் போக்ஸோ வழக்கில் கைதான இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.

திருவாரூா் மாவட்டம், பேரளம் அருகே வஸ்திராஜபுரத்தைச் சோ்ந்தவா் சுந்தரமூா்த்தி மகன் ராமதாஸ் (28). இவா், 2013-இல் அப்பகுதியில் சிறுமி ஒருவா் விளையாடிக்கொண்டிருந்தபோது, அவரைத் தூக்கிச் சென்று தவறாக நடந்து கொண்டாராம். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாா் நன்னிலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், ராமதாஸ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதுகுறித்த வழக்கு விசாரணை திருவாருா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இறுதி விசாரணை முடிக்கப்பட்டு, மகளிா் விரைவு நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ் புதன்கிழமை வழங்கிய தீா்ப்பில், ராமதாஸின் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதம் விதிக்கப்படுவதாக அவா் தெரிவித்தாா்.