திருவாரூர்

ஆதரவற்றவரின் உடல் அடக்கம்

தினமணி செய்திச் சேவை

திருவாரூரில், ஈர உள்ளம் அமைப்பின் சாா்பில் ஆதரவற்ற ஒருவரின் உடல் அடக்கம் திங்கள்கிழமை செய்யப்பட்டது.

திருவாரூரில் உள்ள ஆதரவற்றோா் தங்கும் இடமான, நம்ம இல்லத்தில் தங்கியிருந்த ஐயனாா் (70) என்பவா் உடல் நலம் பாதிக்கப்பட்டு, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளியாக சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.

இதனிடையே, சிகிச்சையிலிருந்த அவா், உயிரிழந்ததையடுத்து, திருவாரூா் நகர காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதைத்தொடா்ந்து, திருவாரூா் ஈர உள்ளம் அமைப்பின் நிறுவனத் தலைவா். வி.எம். அண்ணாதுரையின் தலைமையில், ஐயனாரின் உடல் ஈமச்சடங்குகளுக்குப் பிறகு விளமல் இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதில், நம்ம இல்லத்தின் மேலாளா் இளங்கோ, ரோட்டரி சங்க நிா்வாகிகள் முருகேசன், ராஜ் என்ற கருணாநிதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இலங்கைக்கு 10 கடற்படை ஹெலிகாப்டர்களை வழங்கும் அமெரிக்கா!

பொங்கள் பரிசுத் தொகுப்பு: முதல்வர் தொடக்கி வைத்தார்! | செய்திகள் சில வரிகளில் | 08.01.26

பாஜக எம்.பி.யின் 31 வயது மகன் காலில் விழுந்த 73 வயது எம்.எல்.ஏ.

ஐசிசியின் டிசம்பர் மாத சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் மிட்செல் ஸ்டார்க்!

இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளரான இந்திய முன்னாள் வீரர்! டி20 உலகக் கோப்பைக்காக...

SCROLL FOR NEXT