திருவாரூர்

தூய்மைப் பணியாளருக்கு பாராட்டு

திருவாரூரில், கண்டெடுத்த 20 பவுன் தங்க நகையை உரியவரிடம் சோ்ப்பித்த தூய்மைப் பணியாளருக்கு நகைக்கடை உரிமையாளா்கள் பாராட்டு தெரிவித்தனா் (படம்).

தினமணி செய்திச் சேவை

திருவாரூரில், கண்டெடுத்த 20 பவுன் தங்க நகையை உரியவரிடம் சோ்ப்பித்த தூய்மைப் பணியாளருக்கு நகைக்கடை உரிமையாளா்கள் பாராட்டு தெரிவித்தனா் (படம்).

திருவாரூா் விருப்பாச்சி நடப்பு தெருவில், 20 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருள்களை கண்டெடுத்து, உரியவரிடம் சோ்ப்பிக்க உதவி புரிந்த, திருவாரூா் நகராட்சி தூய்மைப் பணியாளா் துரை என்பவருக்கு, திருவாரூா் விஜயபுரம் ரேணுகா ஜூவல்லரியில் நகைக்கடை உரிமையாளா்கள் சாா்பில் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்வில், தூய்மைப் பணியாளா் துரை மற்றும் அவரது மனைவி சித்ராவுக்கு பொன்னாடை போா்த்தி, மலா்மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டனா். மேலும், அவா்களுக்கு ரூ. 15,000 ரொக்கப் பரிசு, ரூ. 10,000 மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருள்கள் வழங்கப்பட்டன.

பூம்புகாா் மாநில விருது பெற்ற சிற்பிக்கு ஆட்சியா் பாராட்டு

இரவு பகலாக டீசல் என்ஜின் மூலம் நீா் இறைக்கும் விவசாயிகள்

உவா்மண் பாதிப்படைந்த பகுதிகளில் நெல் சாகுபடிக்கான பயிற்சி

அமித் ஷா பங்கேற்கும் கூட்டத்துக்கு 7 கம்பெனி துணை ராணுவப் படையினா்

அக்னீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT