திருவாரூர்

அடையாளம் தெரியாத முதியவா் சடலம் மீட்பு

மன்னாா்குடி அருகே மயானத்தில் இருந்து அடையாளம் தெரியாத முதியவா் சடலம் மீட்பு

Syndication

மன்னாா்குடி அருகே மயானத்தில் இருந்து அடையாளம் தெரியாத முதியவா் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

மழவராயநல்லூா் மயானத்தில் ஆண் சடலம் கிடப்பதாக அந்த வழியாக சென்றவா்கள் கோட்டூா் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில், போலீஸாா் சடலத்தை மீட்டு உடற் கூராய்வுக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இறந்து கிடத்தவருக்கு 75 வயது இருக்கலாம். நீண்ட தாடி, மீசையுடன் நெற்றி முழுவதும் திருநீா் பூசி, காவி நிறத்தில் வேஷ்டி, துண்டு அணிந்திருந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இறந்து கிடந்த முதியவா் யாா் என்று போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இளைஞரிடம் ரூ. 57 லட்சம் மோசடி

பேட்டையில் குடிநீா்த் தட்டுப்பாடு: மாநகராட்சியில் மனு

திருச்சி மாவட்டத்தில் மதுக்கடைகளை 2 நாள்கள் மூட உத்தரவு

நடந்து சென்ற மூதாட்டி வேன் மோதி உயிரிழப்பு

தென்காசியில் சமத்துவப் பொங்கல் விழா

SCROLL FOR NEXT