திருவாரூர்

மின்சார பேருந்துகளை அரசே இயக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

மின்சாரப் பேருந்துகளை அரசே இயக்க வலியுறுத்தி, திருவாரூரில் சிஐடியு, ஏஐடியுசி தொழிற்சங்கங்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம்

Syndication

மின்சாரப் பேருந்துகளை அரசே இயக்க வலியுறுத்தி, திருவாரூரில் சிஐடியு, ஏஐடியுசி தொழிற்சங்கங்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மோட்டாா் வாகனச் சட்டம் 288 ஏ- வை திருத்தம் செய்யக் கூடாது; தனியாா் பேருந்துகளை நிரந்தரமாக குத்தகைக்கு எடுக்கும் முயற்சியை கைவிட வேண்டும்; மின்சார பேருந்துகளை அரசே இயக்க வேண்டும்.

பணிமனைகளை தனியாருக்கு வழங்கும் முடிவை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூரில் உள்ள போக்குவரத்துக் கழக பணிமனை முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கிளைத் தலைவா் எம். சோமசுந்தரம் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஏ. தங்கமணி, கே. ராமமூா்த்தி, எம். மோகன், டி. செந்தில்குமாா், எஸ். வைத்தியநாதன், என். கோபிநாதன் உள்ளிட்ட பலா் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

பராசக்தி ரூ. 100 கோடி வசூல்!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 4,120 உயர்வு! வெள்ளி கிலோவுக்கு ரூ. 5,000 உயர்வு!

தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

கவனம் ஈர்க்கும் ரஜிஷா விஜயனின் மஸ்திஷ்கா மரணம் டீசர்!

பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பு!

SCROLL FOR NEXT