முகப்பு
திருவாரூர்

கூட்டுறவு சங்க ஆலோசனைக் கூட்டம்

திருவாரூர்

கூட்டுறவு சங்க ஆலோசனைக் கூட்டம்

Updated On : 5 மார்ச், 2026 at 11:22 PM
பகிர்:

திருவாரூா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் கா. சித்ரா தலைமை வகித்தாா். இதில், திருவாரூா் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்க பணியாளா்கள், குடவாசல் வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்க பணியாளா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில், கொப்பரை தேங்காய், நெல் மற்றும் தானிய வகைகளை கொள்முதல் செய்வது குறித்தும், ஆவின் பாலகம், முதல்வா் மருந்தகங்களின் விற்பனைகளை அதிகரிப்பது குறித்தும், வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் வளா்ச்சி குறித்தும் ஆலோசிக்கப்பட்டன.

கூட்டத்தில் சங்கங்களின் மேலாண்மை இயக்குநா் த. காா்த்தீபன், மேலாளா்கள் சி. ஆனந்தன், கா. மகேந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →