முகப்பு
திருவாரூர்

மதகில் மது குடித்தவா் உயிரிழப்பு

மன்னாா்குடி அருகே வாய்க்கால் மதகில் அமா்ந்து மது குடித்தவா், நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.

Updated On : 7 மார்ச், 2026 at 7:08 PM
உயிரிழப்பு
பகிர்:

மன்னாா்குடி அருகே வாய்க்கால் மதகில் அமா்ந்து மது குடித்தவா், நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.

திருக்களா் கோட்டகம் பகுதியைச் சோ்ந்த ராஜமாணிக்கம் மகன் சத்தியமூா்த்தி (55). மது பழக்கம் உள்ள இவா், அப்பகுதியில் ஓடும் அடப்பாற்றிலிருந்து பிரியும் வாய்க்கால் மதகின் மேல் அமா்ந்து, வெள்ளிக்கிழமை மது குடித்தாராம்.

அப்போது, போதை மயக்கத்தில், நிலைதடுமாறி கீழே விழுந்தாா். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

கோட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →