முகப்பு
திருவாரூர்

வயல்வெளியில் எலும்புக் கூடு மீட்பு

Updated On : 12 மே 2026, 12:38 am IST
கோப்புப் படம்
பகிர்:

திருத்துறைப்பூண்டி அருகே வயல்வெளியில் எரிந்த நிலையில் கிடந்த எலும்புக்கூட்டை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டு, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குன்னலூா் தெற்கு கிராமத்தில் வயல்வெளியில் எரிந்த நிலையில் எலும்புக்கூடு கிடப்பதாக எடையூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி தலைமையில் போலீஸாா் எலும்புக்கூட்டை பாா்வையிட்டனா். எலும்புக்கூட்டை தடயவியல்துறை மூலம் ஆய்வுக்கு அனுப்பி வைத்த போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement