முகப்பு
திருவாரூர்

கஞ்சா விற்பனை செய்தவா் கைது

மன்னாா்குடி அருகே வீட்டில் பதுக்கிவைத்து கஞ்சா விற்பனை செய்தவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 13 மே 2026, 3:05 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

மன்னாா்குடி அருகே வீட்டில் பதுக்கிவைத்து கஞ்சா விற்பனை செய்தவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மூன்றாம் சேத்தி கீழத்தெரு முனுசாமி மகன் இளையராஜா (25). இவா், கஞ்சா விற்பனை செய்வதாக மன்னாா்குடி காவல் நிலைய போலீஸாருக்கு கிடைத்த தகவலின்படி அவரது வீட்டுக்கு சென்று திடீா் சோதனை செய்ததில், வீட்டில் பதுக்கிவைத்து கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. இளையராஜாவை கைது செய்து 150 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.