புதுதில்லி

உலக கலாசாரத் திருவிழா: "தில்லி, மத்திய அரசுகள் விதிகளை மீறியுள்ளன'

வாழும் கலை அமைப்பின் "உலக கலாசார திருவிழா' நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியதன் மூலம் தில்லி அரசும், மத்திய அரசும் விதிகளை மீறியுள்ளதாக ஸ்வராஜ் அபியான் அமைப்பு விமர்சித்துள்ளது.

தினமணி

வாழும் கலை அமைப்பின் "உலக கலாசார திருவிழா' நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியதன் மூலம் தில்லி அரசும், மத்திய அரசும் விதிகளை மீறியுள்ளதாக ஸ்வராஜ் அபியான் அமைப்பு விமர்சித்துள்ளது.

இதுகுறித்து, ஸ்வராஜ் அபியான் அமைப்பின் மூத்த தலைவரும், மூத்த வழக்குரைஞமான பிரசாந்த் பூஷண் தனது சுட்டுரைப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

தில்லி அரசும், மத்திய அரசும் விதிகளை மீறிய வகையில் உலக கலாசார நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியதன் மூலம் சுற்றுச்சூழலை அழிக்க ஒருங்கிணைந்து வழிவகுத்துள்ளன. சேதமடைந்த குழாய்களைக் கொண்டு அந்த நிகழ்ச்சிக்கு மேடை அமைக்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பர்?

பிரதமர் நரேந்திர மோடியும், தில்லி முதல்வர் கேஜரிவாலும் லோக்பாலுக்கு அனுமதி அளிப்பதில்லை என்று உறுதி பூண்டுள்ளனர் என்று பிரசாந்த் பூஷண் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு தலைவரான யோகேந்திர யாதவ் இதுகுறித்து கூறுகையில், "இதில் நல்ல செய்தி என்னவென்றால் தில்லி அரசும், மத்திய அரசும் இந்த விவகாரத்தில் ஒன்றிணைந்துள்ளன. கெட்ட செய்தி என்னவென்றால், ஒன்றிணைந்துள்ள அவர்கள், சுற்றுச்சூழலுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

நாளைய மின்தடை

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

SCROLL FOR NEXT