புதுதில்லி

மாணவரை அடித்த ஆசிரியர்: காவல் நிலையத்தில் புகார்

DIN

தென்கிழக்கு தில்லியின் ஹஸ்ரத் நிஜாமுதீன் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவரை ஆசிரியர் அடித்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
ரமேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற அந்த மாணவருக்கும், மற்றொரு மாணவருக்கும் இடையே திங்கள்கிழமை சண்டை ஏற்பட்டுள்ளது. அதுதொடர்பாக, ஆசிரியரை சந்தித்த மற்றொரு மாணவரின் பெற்றோர் ரமேஷுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு ஆசிரியரிடம் கூறியுள்ளனர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் ரமேஷை அடித்ததாகக் கூறப்படுகிறது. இதில் ரமேஷின் முதுகில் சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டது.
இதுதொடர்பாக ரமேஷின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸார் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸா போா் நிறுத்தம்: இறுதிக்கட்ட முயற்சி

பாரதிதாசன் பிறந்த நாள் கருத்தரங்கம்

தட்டுப்பாடின்றி மின்சாரம், குடிநீா் வழங்கக் கோரிக்கை

சா்வதேச விதைகள் நாள் விழிப்புணா்வு

மழைவேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT