புதுதில்லி

பைக்கில் சென்ற இருவர் வாகனம் மோதி சாவு

DIN

தெற்கு தில்லி சிவில் லைன்ஸ் பகுதியில் மோட்டார்சைக்கிளில் சென்ற இருவர், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தனர்.
இது குறித்து காவல்துறை அதிகாரி கூறியதாவது:
இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்துள்ளது. விஜேந்தர் (24), அஜய் (30) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில்  இருவரும் சில மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டனர். இதில்  இருவரும் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

SCROLL FOR NEXT