புதுதில்லி

இளைஞர் அடித்துக் கொலை: பக்கத்து வீட்டுக்காரர் கைது

DIN

தென்கிழக்கு தில்லி ஜெய்த்பூரில் இளைஞர் ஒருவரை அடித்துக் கொன்றதாக பக்கத்து வீட்டுக் காரரை போலீஸார் கைது செய்தனர். இது குறித்து காவல் துறை உயரதிகாரி வியாழக்கிழமை கூறியதாவது:  
தென்கிழக்கு தில்லி ஜெய்த்பூரில் தனது பெற்றோருடன் வசித்து வந்தவர் கோவிந்த் (30). அவரது வீட்டுக்கு அடுத்த வீட்டில் வசித்து வருபவர் திரன். இந்நிலையில், கோவிந்தை பக்கத்து வீட்டுக்காரர் திரன், அவரது தந்தை, அவரது சகோதரர் ஆகியோர் செவ்வாய்க்கிழமை சரமாரியாகத் தாக்கினர். இதில் அவர் உயிரிழந்தார்.  அவருடன் இருந்த கூட்டாளிகள் தப்பிச் சென்றனர்.
அவர்கள் கொள்ளையிடும் நோக்கில் வீட்டுக்குள் நுழைந்தபோது கையும் களவுமாக பிடிப்பட்டனர் என்று திரனின் மனைவி போலீஸில் தெரிவித்தார். மேலும், ஆத்திரத்தில் அவரை தனது கணவர் தாக்கியதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையே, முன்விரோதம் காரணமாக கோவிந்தை அவரது வீட்டுக்கு வெளியே வைத்துத்தான் அவர்கள் வேண்டுமென்றே தாக்கிக் கொன்றுள்ளனர் என்று கோவிந்தின் தந்தை போலீஸில் புகார் அளித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து திரனை கைது செய்தனர். மேலும், கோவிந்த் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக கொள்ளை முயற்சி வழக்குப் பதிவு  செய்து விசாரித்து வருகின்றனர். கோவிந்தின் சாவுக்கான உண்மையான காரணம் என்ன என்பதைக் கண்டுபிடிக்க, தலைமறைவாகியுள்ள அவரது  கூட்டாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர் என்றார் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

SCROLL FOR NEXT