புதுதில்லி

டிடிஇஏ பள்ளிகளில் பெரியார் பிறந்த தின விழா

DIN

தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் பெரியார் பிறந்த தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, அந்தந்தப் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, பள்ளி முதல்வர்கள் ஹரிகிருஷ்ணன் (மோதிபாக்), சித்ரா வாசகம் (ராமகிருஷ்ணாபுரம்), காயத்ரி (மந்திர் மார்க்), சித்ரா ராதாகிருஷ்ணன் (முதல்வர் பொறுப்பு-பூசா சாலை), ரஞ்சன் குப்தா (முதல்வர் பொறுப்பு - ஜனக்புரி) ஆகியோர் பெரியாரின் உருவப்படத்துக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செய்தனர். 
அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களின் உரை இடம் பெற்றது. மோதிபாக் பள்ளியில் பெரியாரின் கொள்கைகளை பதாகைகள் மூலம் மாணவர்கள் காட்சிப்படுத்தியிருந்தனர். மேலும், ஜாதி, மதம், இன வேறுபாடின்றி அனைவருடன் பழகி ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்குவோம் என அனைவரும் உறுதி ஏற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT