புதுதில்லி

சத்தரசால் விளையாட்டு மைதானத்தில் தேசியக் கொடி ஏற்றுகிறார் கேஜரிவால்

DIN

தில்லி அரசு சார்பில் சுதந்திர தின விழா வியாழக்கிழமை தில்லி சத்தரசால் விளையாட்டு மைதானத்தில் காலை 10.30 மணி முதல் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில், முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றிவைத்துப் பேசுகிறார். துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, தில்லி அமைச்சர்கள், எம்எம்ஏக்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். மேலும், தில்லி அரசுப் பள்ளி மாணவர்கள் பங்கு பெறும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன என்று தில்லி அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். 
சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தையொட்டி, சட்டப்பேரவை கட்டடம் முழுவதும் அலங்கார மின்விளக்குகளால் ஜொலிக்கிறது. இதேபோல, தில்லியில் உள்ள மாநகராட்சிகள் அனைத்திலும் சுதந்திர தின விழா வியாழக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ஏற்காட்டுக்கு சென்ற நடிகர்கள் பட்டாளம்: காரணம் என்ன?

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

SCROLL FOR NEXT