புதுதில்லி

சுய விளம்பரத்துக்கு அரசு பணம்: கேஜரிவால் மீது குற்றச்சாட்டு

DIN


சுய விளம்பரத்துக்கு அரசு பணத்தை பயன்படுத்துவதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மீது தில்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், செலவினங்கள் குறித்து தில்லி மக்கள் கேள்வி எழுப்பும் போது அவர் தனது பொறுப்பை தட்டி கழிக்க முடியாது எனவும் ஷீலா தீட்சித் தெரிவித்தார். 
இது குறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:  தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சுய விளம்பரங்களுக்கு அரசின் பணத்தை கோடிக்கணக்கில் செலவிட்டு வருகிறார். குறிப்பிடும்படியான எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தாமலே, சாதனைகள் புரிந்ததாக தில்லி அரசு விளம்பரம் செய்து வருகிறது.  இதை துணைநிலை ஆளுநர் தடுக்க வேண்டும்.  விளம்பரங்களுக்கு செலவிடுவதற்குப் பதில், வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும். விளம்பரங்களுக்கு செலவிடப்படும் வீண் தொகை குறித்த காங்கிரஸின் கேள்விக்கு முதல்வர் கேஜரிவால் பதில் அளிக்கவில்லை. இந்தக் கேள்வியை தில்லி மக்கள் கேட்கும் போது தனது பொறுப்பை அரவிந்த் கேஜரிவால் தட்டிக் கழிக்க முடியாது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT