மத்திய தில்லியில் வாகனங்கள் மற்றும் செல்லிடப்பேசிகள் திருட்டுப் போன சம்பவங்கள் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வினய் (28), விகாஸ் (27) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை போலீஸார் ரோந்துப் பணியில் இருந்தபோது அவர்கள் சிக்கினர். அவர்களிடம் இருந்து 5 ஸ்கூட்டர்கள், 12 செல்லிடப்பேசிகள், ஒரு நாட்டுத் துப்பாக்கி, நான்கு தோட்டாக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன என்று போலீஸார் தெரிவித்தனர்.