புதுதில்லி

வீட்டுமுன் இளைஞர் சுட்டுக் கொலை: விகாஸ்புரியில் சம்பவம்

DIN


தில்லியில் 35 வயது இளைஞர் தனது வீட்டு முன் மர்ம நபர்களால் வியாழக்கிழமை நள்ளிரவு சுட்டுக் கொலை செய்யப்பட்டார். 
இதுகுறித்து கூறப்படுவதாவது: தில்லி விகாஸ்புரியைச் சேர்ந்தவர் அமித் கொச்சர் (35). இவர், தனது வீட்டின் முன் வியாழக்கிழமை நள்ளிரவு நின்றுகொண்டிருந்தார். வீட்டுக்குள் அவரது நண்பர்கள் இருவர் இருந்தனர். உணவு சாப்பிட விரும்பிய கொச்சரும், அவரது நண்பர்களும் , அதற்காக இணையதளம் மூலம் ஆர்டர் அளித்திருந்தனர். இந்நிலையில், சிறிது நேரம் கழித்து அவர்களது வீட்டு மணி அடித்தது. இதையடுத்து, உணவு சப்ளை செய்வதற்காக நிறுவனத்தில் இருந்து ஊழியர் வந்திருப்பதாக நினைத்து கதவைத் திறந்தார் கொச்சர். அப்போது, அவரை சிலர் வெளியே இழுத்து காருக்குள் தள்ளி துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். துப்பாக்கிச் சப்தம் கேட்டு அவரது நண்பர்கள் வெளியே வந்து பார்த்தபோது, மயங்கிய நிலையில் கொச்சர் கிடந்தார். அவரை டிடியு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் சேகரித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
சுட்டுக்கொல்லப்பட்ட அமித் கொச்சர் சொத்து வணிகத்தில் ஈடுபட்டுவந்தார். தனது மனைவியுடன் வசித்து வந்த அவரது கொலைக்கு சொத்து வணிகப் பிரச்னை ஏதும் இருந்ததா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது நண்பர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT