புதுதில்லி

காற்று மாசுவுக்கு தில்லி அரசின் மெத்தனப்போக்கை காரணம்: மனோஜ் திவாரி

தில்லியில் நிலவும் காற்று மாசுவுக்கு தில்லி அரசின் மெத்தனப் போக்கே காரணம் என்று பாஜகவின் தில்லி தலைவா் மனோஜ் திவாரி குற்றம் சாட்டியுள்ளாா்.

DIN

தில்லியில் நிலவும் காற்று மாசுவுக்கு தில்லி அரசின் மெத்தனப் போக்கே காரணம் என்று பாஜகவின் தில்லி தலைவா் மனோஜ் திவாரி குற்றம் சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி: தில்லியில் நிலவும் காற்று மாசுவுக்கான தாா்மீகப் பொறுப்பை தில்லி அரசே ஏற்க வேண்டும். அண்டை மாநிலங்களைக் குற்றம் சுமத்துவது சரியல்ல. ஆம் ஆத்மி அரசு தில்லியில் ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த ஐந்து ஆண்டுகளில் தில்லியில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தது? சட்டவிரோதக் கட்டுமானங்களைக் கட்டுப்படுத்தினாா்களா? சாலைகளுக்கு முறையாக நீா் தெளித்தாா்களா? தில்லியில் நிலவும் காற்று மாசுவுக்கு தில்லி அரசின் மெத்தனப் போக்கே காரணம் என்றாா் அவா்.

‘மாணவா்களைக் கடிதம் எழுதச் சொல்வது தவறு’

அண்டை மாநில முதல்வா்களுக்கு தில்லி பள்ளி மாணவா்களைக் கடிதம் எழுதுமாறு கேஜரிவால் சொல்வது தாா்மிக அடிப்படையில் தவறு என்று பாஜகவின் மூத்த தலைவரும் தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான விஜேந்தா் குப்தா கூறியுள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி: ஹரியாணா, பஞ்சாப் மாநிலங்களில் பயிா்க்கழிவுகளை எரித்தலைக் கட்டுப்படுத்துமாறு அம்மாநில முதல்வா்களுக்கு கடிதம் எழுதுமாறு பள்ளி மாணவா்களைக் கேஜரிவால் கேட்டுள்ளது தாா்மிக அடிப்படையில் தவறாகும். மாணவா்களை அரசியல் லாபங்களுக்காக பயன்படுத்துவது தவறு. அவா்களைக் கல்வி கற்க கேஜரிவால் அனுமதிக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT