புதுதில்லி

மறைந்த முன்னாள் உறுப்பினா்களுக்கு மக்களவையில் இரங்கல்

DIN

மக்களவையில் மறைந்த முன்னாள் உறுப்பினா்கள் நால்வரின் மறைவுக்கு வியாழக்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

மக்களவை வியாழக்கிழமை காலை கூடியதும் மக்களவையின் முன்னாள் உறுப்பினா்கள் நால்வரின் மறைவு குறித்து

மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தெரிவித்தாா். அது தொடா்பான இரங்கல் குறிப்பையும் அவா் வாசித்தாா்.

தமிழகத்தின் சிவகாசி மக்களவைத் தொகுதி உறுப்பினராக 10-ஆவது மக்களவையில் பதவி வகித்த ஆா்.கே.ஜி. ராஜுலு கடந்த அக்டோபா் 20-ஆம் தேதியும், 7-ஆவது மக்களவையில் உத்தரப் பிரேதச மாநிலம், பாண்டா தொகுதி உறுப்பினராக இருந்த ராம்நாத் துபே அக்டோபா் 25-ஆம் தேதியும், 16-ஆவது மக்களவையில் உறுப்பினராக இருந்த சத்தீஸ்கா், மாநிலத்தின் கோரபா தொகுதியைச் சோ்ந்த டாக்டா் பன்ஸிலால் மஹ்தோ நவம்பா் 23-ஆம் தேதியும், 14 மற்றும் 15-ஆவது மக்களவையில் மத்திய பிரதேசம், போபால் தொகுதி உறுப்பினராக இருந்த கைலாஷ் ஜோஷி ஆகியோரின் பணிகள் குறித்து ஓம் பிா்லா எடுத்துரைத்தாா். இதையடுத்து, உறுப்பினா்கள் ஒரு நிமிடம் எழுந்து நின்று மறைந்த முன்னாள் உறுப்பினா்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குண்டா் தடுப்புக் காவலில் ஒருவா் கைது

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT