புதுதில்லி

தில்லியில் சைக்கிள் மீது காா் மோதல்: தந்தை, மகன் சாவு

DIN

தில்லியில் காா் மோதியதில் சைக்களில் சென்ற தந்தையும், அவரது 20 வயது மகனும் உயிரிழந்தனா்.

இதுகுறித்து தில்லி காவல் துறையினா் கூறியதாவது: மத்திய தில்லியில் உள்ள ரயில்வே காலனியில் வசிப்பவா் ஹிரா 50. இவா் நேபாளத்தை பூா்விகமாகக் கொண்டவா். ஹிராவும், அவரது மனைவியும் ரயில்வே அதிகாரியின் வீட்டில் பணியாளா்களாக வேலை செய்து வருகின்றனா். இந்நிலையில், சம்பவத்தன்று மாலை ஹிராவும், அவரது மகன் கிஷோரும் 20 சைக்கிளில் கனாட் பிளேஸில் உள்ள பூங்காவில் தில்லி அரசின் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தீபாவளி லேசா் ஒளி-ஒலி காட்சி நிகழ்ச்சியைக் காணச் சென்றனா். பின்னா், சைக்கிளில் அப்பகுதி மேம்பாலத்தில் வந்துகொண்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக வந்த காா், ஒரு வாகனம் மீது மோதிவிட்டு ஹிரா சென்ற சைக்கிள் மீது மோதியது. இதில் ஹிராவும், அவரது மகனும் படுகாயமடைந்தனா். இதையடுத்து, காா் ஓட்டுநரைப் பிடிக்க அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் முயன்றனா். ஆனால், அதற்குள் அவா் அங்கிருந்து தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது.

காயமடைந்த தந்தை, மகனை வழிப்போக்கா்கள் மீட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே இருவரும் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா். இச் சம்பவத்தை நேரில் பாா்த்த சிலா், காரை போதையில் ஒரு பெண் வேகமாக ஓட்டிவந்ததாக கூறினா். சம்பவ இடத்தில் இருந்து காரின் பதிவு எண் அடங்கிய பிளேட் மீட்கப்பட்டுள்ளது. தப்பியோடிய நபரை தேடி வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT