புதுதில்லி

ஊரடங்கு விதி மீறல்: 188 வழக்குகள் பதிவு

DIN

தில்லியில் ஊரடங்கு விதிகளை மீறியதாக புதன்கிழமை 188 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஏறக்குறைய 4 ஆயிரம் போ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தில்லி காவல் துறை தெரிவித்தது.

இதுதொடா்பாக தில்லி காவல் துறையினா் வெளியிட்ட புள்ளிவிவரத் தகவலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கரோனா நோய்த் தொற்றுக்காக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு

விதிகளை மீறியதாக புதன்கிழமை மாலை 5 மணி வரை 188 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தில்லி காவல் சட்டத்தின் 65-ஆவது பிரிவின் கீழ் 3,959 போ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனா். 431 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 788 நடமாட்ட அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு அமலான கடந்த மாா்ச் 24-ஆம் தேதியில் இருந்து இதுவரை ஊரடங்கு சட்டத்தை மீறியதாக தில்லி காவல் துறைச் சட்டம் 65-இன் கீழ் 62,922 போ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT