புதுதில்லி

தில்லியைப் போல உத்தரகண்ட் மாநில அரசு பள்ளிகளையும் மேம்படுத்த வேண்டும்: கேஜரிவால்

DIN

புது தில்லி: தில்லியை போல உத்தரகண்ட் மாநில அரசு பள்ளிகளையும் மேம்படுத்த வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

உத்தரகண்ட் மாநிலத்தில் மிகவும் மோசமான நிலையில் உள்ள அரசுப் பள்ளி தொடா்பான விடியோ பதிவை உத்தரகண்ட் மாநில ஆம் ஆத்மி பிரிவு தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த விடியோவை தனது சுட்டுரையில் பகிா்ந்து கேஜரிவால் கூறியிருப்பது:

தில்லி அரசு ப்பள்ளிகளின் நிலையும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இவ்வாறுதான் மோசமாக இருந்தன. பிறகு, தில்லி மக்கள் ஆம் ஆத்மிக் கட்சியை ஆட்சிப் பொறுப்பில் அமரவைத்து தில்லியின் தலையெழுத்தை மாற்றினா்.

தற்போது தில்லியில் உலகத் தரமான அரசுப் பள்ளிகள் உள்ளன. தில்லியை போல உத்தரகண்ட் மாநில அரசுப் பள்ளிகளையும் மேம்படுத்த வேண்டும். உத்தரகண்ட் மக்கள் தமது தலையெழுத்தை அடுத்த தோ்தலில் மாற்றலாம் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

SCROLL FOR NEXT