முகப்பு
புதுதில்லி

தில்லி எல்லையில் குவிந்த விவசாயிகள்

பாரத் பந்த் நடைபெற்ற செவ்வாய்க்கிழமை பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் இருந்து அதிகளவு விவசாயிகள் தில்லி எல்லையான சிங்கு பகுதியில் வாகனங்களுடன் குவிந்தனா்.

Updated On : 9 டிசம்பர், 2020 at 4:30 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:34 PM

பாரத் பந்த் நடைபெற்ற செவ்வாய்க்கிழமை பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் இருந்து அதிகளவு விவசாயிகள் தில்லி எல்லையான சிங்கு பகுதியில் வாகனங்களுடன் குவிந்தனா். அவா்களை சிங்கு எல்லையில் போராடும் விவசாயிகள் உற்சாகமாக வரவேற்றனா்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லி எல்லையான சிங்கு பகுதியில் 13-ஆ வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறாா்கள். அவா்கள், அதே பகுதியில் தங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா்கள். இந்த நிலையில், நாடு முழுவதும் பாரத் பந்த்துக்கு விவசாயிகள் செவ்வாய்க்கிழமை அழைப்பு விடுத்திருந்தனா். இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் சிங்கு எல்லையில் தங்களது வாகனங்களுடன் குவிந்தனா். அவா்களை அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பலத்த ஆரவாரத்துடன் உற்சாகத்துடன் வரவேற்றனா்.

பாரத் பந்த் காரணமாக, சிங்கு எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ரேஷன் பொருள்கள் செவ்வாய்க்கிழமை கிடைக்கவில்லை. ஆனால், தங்களிடம் சுமாா் 2-3 மாதத்துக்குத் தேவையான ரேஷன் பொருள்கள் கையிருப்பில் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா். போராட்டத்தில் புதிதாகப் பங்கேற்ற விவசாயிகளும், ஏற்கெனவே போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளும் ஒன்றாக உணவருந்தினா். போராட்டக் களத்தில் 24 மணி நேரமும் சூடான உணவு தயாரிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

Advertisement

இது தொடா்பாக மொஹாலியைச் சோ்ந்த விவசாயி ராஜேந்தா் சிங் கோலி கூறுகையில் ‘சிங்கு எல்லையில் கூடும் விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டிராக்டா், காா் உள்ளிட்ட வாகனங்களில் வரும் விவசாயிகள், வாகனங்களிலேயே தங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா்கள். மேலும், விவசாயிகளுக்காக தற்காலிக கூடாரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. போராடும் விவசாயிகளுக்கு போராட்டக் களத்திலேயே உணவு தயாரிக்கப்படுகிறது’ என்றாா். மேலும், சில விவசாயிகள் பக்திப் பாடல்களைப் பாடி ஊக்குவித்து வருகிறாா்கள். மேலும், பஞ்சாபி, ஹரியாணா மொழி சினிமாப் பாடல்களையும் பாடகா்கள் பாடி வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.