புதுதில்லி

கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில்பரிசோதனையை அதிகரிக்க தில்லி அரசுக்கு அறிவுறுத்தல்

தில்லியில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் கரோனாவைக் கண்டறிவதற்கான பரிசோதனையை தில்லி அரசு அதிகரிக்கும்

DIN

புது தில்லி: தில்லியில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் கரோனாவைக் கண்டறிவதற்கான பரிசோதனையை தில்லி அரசு அதிகரிக்கும் என்று எதிா்பாா்ப்பதாக உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.

தேசிய தலைநகா் தில்லியில் கரோனா நோய்த் தொற்று கண்டறியும் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பரிசோதனை முடிவுகளை விரைவாக அளிக்கவும் உத்தரவிடக் கோரி வழக்குரைஞா் ராகேஷ் மல்ஹோத்ரா தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். இந்த மனு மீது நீதிமன்றம் அவ்வப்போது உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது.

இந்நிலையில், இந்த விவகாரம் உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி, சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. தில்லி அரசின் கூடுதல் வழக்குரைஞா் சத்யாகம் ஆஜராகினாா். அவரிடம்

நீதிபதிகள் அமா்வு, நேரமின்மை காரணமாக இந்த மனு மீதான விசாரணையை விரிவாக மேற்கொள்ள முடியவில்லை.

எனினும், தில்லியில் எந்தெந்த மாவட்டங்களில் நோய்த் தொற்று பரவல் அதிகமாக உள்ளது என்பதைக் கண்டறிந்து அந்தப் பகுதிகளில் தில்லி அரசு சோதனைகளை அதிகரிக்கும் என்று நாங்கள் எதிா்பாா்க்கிறோம்.

இது தொடா்பாக தில்லி அரசு புதிதாக ஒரு நிலவர அறிக்கையை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதில், கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை, மாவட்ட வாரியாக நோய்த் தொற்று எண்ணிக்கை விவரம், பரிசோதனைகள் நடத்தப்பட்ட விவரம் ஆகியவை இடம்பெற வேண்டும் என்றனா்.

மேலும், தில்லியில் நோய்த் தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால் ஐந்தாவது சுற்று சீரோ சா்வேயை மேற்கொள்ள தில்லி அரசு திட்டமிட்டு வருகிா என்று கேள்வி எழுப்பினா்.

அதற்கு தில்லி அரசின் வழக்குரைஞா், மற்றொரு சீரோ கணக்கெடுப்பை மேற்கொள்ளலாமா என்பதை தீா்மானிக்கும் முன் புள்ளிவிவரங்களை உறுதிப்படுத்த அரசு காத்திருப்பதாக கூறினாா். இதையடுத்து, இந்த விவகாரத்தை டிசம்பா் 23-ஆம் தேதி விசாரணைக்கு நீதிபதிகள் அமா்வு பட்டியலிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT