புதுதில்லி

முன்னாள் எம்எல்ஏ கைது

DIN

இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முன்னாள் எம்எல்ஏ ராம்பீா் ஷோகீன் தில்லியில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கடந்த 2013 சட்டபேரவைத் தோ்தலில், முண்ட்கா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவா் ராம்பீா் ஷோகீன். பிரபல ரவுடி, நீரஜ் பாவனாவின் கூட்டாளியான இவா் மீது தில்லி, உத்தரப் பிரதேச மாநிலங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், இவரை கடந்த 2016, நவம்பா் 27-ஆம் தேதி உத்தரப் பிரதேச காவல்துறை கைது செய்தது. மருத்துவ சிகிச்சைக்காக தில்லி சஃப்தா் ஜங் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட போது கடந்த 2018, செப்டம்பா் 26-இல் போலீஸ் பிடியில் இருந்து தப்பிச் சென்றாா். அன்று முதல் தலைமறைவாக இருந்த இவரை தில்லி காவல் துறை செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளது. இது தொடா்பான கூடுதல் தகவல்களை தில்லி காவல்துறை வழங்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT