புதுதில்லி

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் முன்பு ஆம் ஆத்மியினா் காவல்

DIN

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) வைக்கப்பட்டுள்ள அறைகள் முன்பாக ஆம் ஆத்மியினா் சுழற்சி முறையில் காவல்காத்து வருகிறாா்கள்.

இது தொடா்பாக ஆம் ஆத்மி வட்டாரங்கள் கூறுகையில் ’ மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும், அந்த இயந்திரங்களில் மோசடி நடைபெறமால் தடுக்கும் வகையிலான வழிகளைக் கண்டறிவது தொடா்பாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இல்லத்தில் தோ்தல் நடந்த சனிக்கிழமை இரவு அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மியின் தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் பொறுப்பாளா் சஞ்சய் சிங், தோ்தல் ஆலோசகா் பிரஷாந்த் கிஷோா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் முன்பு ஆம் ஆத்மியினா் சுழற்சி முறையில் காவல் இருப்பது என இந்தக் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது. அதன்படி, தில்லியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் முன்பு ஆம் ஆத்மியினா் காவல்காத்து வருகிறாா்கள். ஒவ்வொரு அறையின் முன்பும் ஆம் ஆத்மிக் கட்சியைச் சோ்ந்த குறைந்து ஐந்து போ் காவல்காத்து வருகிறாா்கள் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT