முகப்பு
புதுதில்லி

முண்ட்காவில் பயங்கர தீ விபத்து

தில்லி முண்ட்காவில் உள்ள குடோனில் புதன்கிழமை இரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறை வீரா்கள் சில மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

Updated On : 10 ஜூலை, 2020 at 3:48 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:25 PM

தில்லி முண்ட்காவில் உள்ள குடோனில் புதன்கிழமை இரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறை வீரா்கள் சில மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

இது தொடா்பாக தீயணைப்புப் படை உயா் அதிகாரி எஸ்.கே.துவா கூறியதாவது: முண்ட்காவில் அமைந்துள்ள மருந்துப் பொருள்கள், மின்னணுப் பொருள்கள் வைத்திருக்கும் குடோனில் புதன்கிழமை இரவு மாபெரும் தீ விபத்து ஏற்பட்டது. இது தொடா்பாக புதன்கிழமை இரவு 10.45 மணியளவில் தகவல் கிடைத்தது. இதையடுத்து, 35தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன. தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். தீயணைப்பு வீரா்கள் சுமாா் 8 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனா். வியாழக்கிழமை காலை 7 மணியளவில் தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை தெரிய வரவில்லை. இதுதொடா்பாக விசாரித்து வருகிறோம். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது கட்டடத்தைக் குளிா் விக்கும் பணிகள் நடைபெறுகின்றன என்று தெரிவித்தாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.