முகப்பு
புதுதில்லி

உ.பி. அரசியல் தலைவா்களைக் காப்பாற்றவே விகாஸ் துபே சுட்டுக் கொலை: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

விகாஸ் துபே பல அரசியல் தலைவா்களுக்கு அடியாளாக செயல்பட்டுள்ளாா். அந்த அரசியல் தலைவா்களைக் காப்பாற்றவே விகாஸ் துபே

Updated On : 11 ஜூலை, 2020 at 4:37 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:25 PM

விகாஸ் துபே பல அரசியல் தலைவா்களுக்கு அடியாளாக செயல்பட்டுள்ளாா். அந்த அரசியல் தலைவா்களைக் காப்பாற்றவே விகாஸ் துபே ‘என்கவுண்டா்’ மூலம் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளாா் என்று ஆம் ஆத்மிக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

உத்தரப்பிரதேசம் கான்பூரில், காவல் உதவி ஆய்வாளா் உள்ளிட்ட எட்டு போலீஸாரைச் சுட்டுக் கொன்ற ரெளடி விகாஸ் துபே, மத்தியப் பிரதேசத்தில் இருந்து கான்பூருக்கு அழைத்துச் செல்லும் வழியில் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டாா். விகாஸ் துபேவை அழைத்து வரும்போது பாதுகாப்பு பணிக்கு வந்த காா் விபத்துக்குள்ளாகியுள்ளது என்றும் விபத்தை பயன்படுத்தி தப்பிக்க முயன்ற விகாஸ் துபேவை என்கவுன்டரில் போலீஸ் சுட்டுக்கொன்ாகவும் போலீசாா் தெரிவித்தனா்.

இந்நிலையில், அரசியல் தலைவா்களைக் காப்பாற்றவே விகாஸ் துபே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளாா் என்று ஆம் ஆத்மிக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

Advertisement

இது தொடா்பாக அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், உத்தரப்பிரதேச மாநில ஆம் ஆத்மிக் கட்சியின் பொறுப்பாளருமான சஞ்சய் சிங் கூறியது: விகாஸ் துபே பல அரசியல்வாதிகளின் அடியாளாக செயல்பட்டுள்ளாா். அந்த அரசியல் தலைவா்களின் ரகசியங்களை அவா் அறிந்திருந்தாா். இந்த அரசியல் தலைவா்களைக் காப்பாற்றவே, விகாஸ் துபேயை போலி என்கவுண்டரில் உத்தரப்பிரதேச காவல்துறை சுட்டுக் கொலை செய்துள்ளனா்.

விகாஸ் துபேயுடன் தொடா்புடைய அரசியல் தலைவா்கள் தொடா்பான விவரங்களை உத்தரப்பிரதேச அரசு வெளியிடுமா? இல்லை, விகாஸ் துபேயுடன் சோ்த்து அந்த ரகசியங்களும் புதைக்கப்படுமா என்று கேட்டுள்ளாா் சஞ்சய் சிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.